மேலும் செய்திகள்
கண் பரிசோதனை முகாம்
04-Feb-2025
உடுமலை; உடுமலை அருகே, பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, எழுமின் அறக்கட்டளை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், கண்பரிசோதனை இலவச முகாம் நடந்தது.எழுமின் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் துரைமுருகன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, 110 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, 20 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் லோகநாதன், வீரக்குமார், கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
04-Feb-2025