உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை மேடான பி.ஏ.பி., கால்வாய் கரை  

குப்பை மேடான பி.ஏ.பி., கால்வாய் கரை  

சாக்கடை அடைப்புசின்னாண்டிபாளையம், சிவபுரத்தில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. - சிங்காரம், சிவபுரம். (படம் உண்டு)நடவடிக்கை தேவைகொடுவாய், நிழலி, புத்தரச்சல் ரோடு, பங்கம்பாளையம் பிரிவு பி.ஏ.பி., கால்வாய் கரையில் குப்பை கொட்டப்படுகிறது. பாசன நீரில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஸ்ரீஹரிணி, பங்கம்பாளையம் பிரிவு. (படம் உண்டு)தெருநாய்த் தொல்லைதென்னம்பாளையத்தில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நாய்கள் இங்கும், அங்கும் ஓடித் திரிவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.- ராதா ஆனந்த், தென்னம்பாளையம். (படம் உண்டு)பல்லாங்குழி சாலைசின்னாண்டிபாளையம் - ஆண்டிபாளையம் இடையே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். ரோடு போட வேண்டும்.- மணி, சின்னாண்டிபாளையம். (படம் உண்டு)திருப்பூர், பார்க் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர் தடுமாறுவதால், தற்காலிகமாக 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- வின்சென்ட்ராஜ், பார்க் ரோடு. (படம் உண்டு)சாலையில் கழிவுகள்பூலுவப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ரோட்டில் குப்பைகளுடன், இறைச்சிக் கழிவுகளும் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. குப்பை அள்ள வேண்டும்.- சதாசிவம், பூலுவப்பட்டி. (படம் உண்டு)வீதி முழுக்க கழிவுநீர்அனுப்பர்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீதி முழுதும் வழிந்தோடி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- முத்துச்சாமி, அனுப்பர்பாளையம். (படம் உண்டு)திருப்பூர், 57வது வார்டு, திருக்குமரன் நகர் ஆறாவது வீதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதியில்லை. கழிவுநீர் சாலையில் ஓடி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- மதிவாணன், திருக்குமரன் நகர். (படம் உண்டு)குப்பை தேக்கம்திருப்பூர், திருவள்ளுவர் தோட்டம், ரோட்டரி கிளப் வீதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும்.- சிராஜ், திருவள்ளுவர்தோட்டம். (படம் உண்டு)பெருமாநல்லுார், பரமசிவம்பாளையம் - பொங்குபாளையம் ரோட்டில், ஒரு மாதமாக குப்பை அள்ளாமல், அப்படியே தேங்கி கிடக்கிறது. குப்பை அள்ள வேண்டும்.- கவுதம், பொங்குபாளையம். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், அனுப்பர்பாளையம், பெஸ்ட் கார்டன் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது.- விஜி, அனுப்பர்பாளையம். (படம் உண்டு)ஒளிராத விளக்குதிருப்பூர், ரயில்வே கேட், கொங்கு மெயின் ரோட்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.- ராஜ், கொங்கு மெயின் ரோடு. (படம் உண்டு)ரியாக் ஷன் தற்காலிக சீரமைப்புதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, அணைக்காடு பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமானதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தற்காலிகமாக, குழியை மூட மண் கொட்டியுள்ளனர்.- ஜெய்சங்கர், அணைக்காடு. (படம் உண்டு)மின்கம்பம் மாற்றம்அவிநாசி, நம்பியாம்பாளையம், எம்.நாதம்பாளையம் மேற்கு வீதியில் சாய்ந்த நிலையில், மின்கம்பம் இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மின்கம்பத்தை மாற்றி விட்டனர்.- செல்வா, எம்.நாதம்பாளையம். (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை