எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்(அறை எண்: 120) நடைபெற உள்ள முகாமில், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவனப் பிரதி நிதிகள் பங்கேற்கின்றனர். புகார்கள், குறைபாடுகள் இருப்பின் எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் நுகர்வோர் வந்து கலந்துகொள்ளலாம்.