மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
உடுமலை ; மடத்துக்குளம், சங்கராமநல்லுார் பேரூராட்சி, குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கன்னீஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாமோதரன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரியப்பன், பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணை தலைவர் பிரேமலதா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மேஜிக் ேஷா, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
27-Jan-2025