உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில யோகா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

மாநில யோகா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

உடுமலை,; மாநில அளவிலான யோகா போட்டியில், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.தயானந்த சுவாமிகள் குருகுலம் சார்பில், மாநில அளவிலான யோகா போட்டி பழநியில் நடந்தது. இப்போட்டியில், உடுமலை சாய் யோகாலயா சார்பில், பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.அதில், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் குழு யோகா போட்டியில், இரண்டாமிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர், தலைமையாசிரியர் சதீஷ், யோகா பயிற்சியாளர் காளிமுத்து பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை