உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், அடையாள அட்டை வழங்கு வதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த்ராம்குமார் தலைமை வகித்தார்.புதிதாக பதிவு செய்து அடையாள அட்டை பெறுவதற்காகவும்; ஏற்கனவே பெறப்பட்ட கார்டுகளை புதுப்பிப்பதற்காகவும், மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.கண், காது மூக்கு தொண்டை, மனநலம், நரம்பியல், எலும்புமுறிவு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிசோதித்தனர்.மருத்துவ பரிசோதனை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. நேற்றைய முகாமில், மாற்றுத்திறனாளிகள், 48 பேருக்கு புதிய அடையாள அட்டையும், 12 பேரின் அடையாள அட்டை புதுப்பித்து கொடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை