மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.இதில், கண், காது மூக்கு தொண்டை, மனநலம், நரம்பியல், எலும்புமுறிவு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்பு குறித்து பரிசோதித்தனர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், புதிதாக 19 மாற்றுத்திறனாளிகளுக்கும்; 11 பேருக்கு அடையாள அட்டை புதுப்பித்து கொடுக்கப்பட்டது. முகாமில், திரளான மாற்றுத்திறனாளிகள் அவர்களின், பாதுகாவலர்களோடு முகாமில் பங்கேற்றனர்.