கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்
உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். ஆனால், கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர், முதியோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.