உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

உடுமலை: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும காங்கயம் குழும கல்வி நிறுவனம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், காங்கயம் பில்டர்ஸ் கல்லுாரியில் இன்று (28ம் தேதி) காலை, 8:00 மணிக்கு நடைபெறுகிறது.முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றன.எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., - டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி முடித்தோர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.தனியார் துறையில் வேலை பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. வேலை தேடும் இளைஞர்கள், கல்விச்சான்று, பயோடேட்டாவுடன் முகாமில் பங்கேற்கவேண்டும்.வேலை தேடுவோரும், வேலை அளிக்கும் நிறுவனங்களும் முகாமில் பங்கேற்க, www.tnprivatejobs.gov.inஎன்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ