உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரேஷன் குறை தீர்க்கும் முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது

 ரேஷன் குறை தீர்க்கும் முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது

உடுமலை: பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், வரும் 13ம் தேதி நடக்கிறது. தமிழக அரசு பொதுவினியோக திட்டத்தின் வாயிலாக, பொதுமக்களுக்கு ரேஷன்கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம், வரும், 13 ம் தேதி, காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, உடுமலை தாலுகா குறிஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடக்கிறது. அதே போல், மடத்துக்குளம் தாலுகாவிற்கு, கணியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டுகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு கோரிய விண்ணப்பம் என ரேஷன் கார்டுகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும். இம்முகாமில், பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று பயன்பெறுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை