மேலும் செய்திகள்
உயர்மின்விளக்கு அமைக்கணும்
18-Oct-2025
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும் புறநகர் பஸ்களும், கிழக்கு பகுதிக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பயணியர் அங்கு அச்சத்துடன் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, புது பஸ் ஸ்டாண்டில் உயர்மின் விளக்கு அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
18-Oct-2025