மேலும் செய்திகள்
கருத்தரங்கம்
20-Sep-2024
திருப்பூர்: திருப்பூர் - அவிநாசி ரோட்டிலுள்ள ரேவதி நர்சிங் கல்லுாரியில், 2024 - 25ம் ஆண்டு மாணவர்களின் முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.கல்லுாரி நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, அறங்காவலர் ரேவதி மற்றும் நிர்வாக இயக்குனர், கல்லுாரி முதல்வர் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றினர். அனிதா வரவேற்றார்.டாக்டர்கள் விஷ்ணுராகவ், ஹரி பிரணவ், நிர்வாக இயக்குனர் எமரால்டு பொன்னியின் செல்வன், ரேவதி நர்சிங் கல்லுாரி துணை முதல்வர் இளங்கோ, ரேவதி பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் முத்துக்குமார், ரேவதி ஆக்குபேஷனல் தெரபி கல்லுாரி முதல்வர் சரவணகுமார், ரேவதி பாராமெடிக்கல் கல்லுாரி முதல்வர் மெர்லின் ஏஞ்சல் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர். நிவேதா நன்றி கூறினார்.
20-Sep-2024