உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவளாபுரி அம்மன் குண்டம் திருவிழா; நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சிவளாபுரி அம்மன் குண்டம் திருவிழா; நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அவிநாசி; அவிநாசி அருகே நடுவச்சேரியிலுள்ள சிவளாபுரி அம்மன் கோவிலில், 39ம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.கடந்த 20ம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் தீர்த்த குடம், பூச்சட்டி, கரகம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து வேல் பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை குதிரை உத்தரவு பெறுதல், படைக்கலம் எடுத்து வருதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குண்டம் இறங்கினர்.விழாவில், இன்று மறு பூஜை, மஞ்சள் நீர், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் குண்டம் திருவிழா நிறைவுபெறுகிறது. குண்டம் விழாவை முன்னிட்டு விழாக் குழுவினர், முறைக்கட்டு மிராசுகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ