சிலம்பப் பயிற்சி
திருப்பூர்: பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பினை மேம்படுத்த, தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் சிலம்பம், கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்பு பயிற்சிகள் வாரம் இருமுறை என மூன்று மாதங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பும் ஒரு மணி நேரம் நடக்கிறது. அதன்படி, நொய்யல் வீதியிலுள்ள பள்ளியில், நேற்று சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது.