மேலும் செய்திகள்
வெண்டை அறுவடை துவக்கம்; கிடைக்கிறது நிலையான விலை
11-Apr-2025
உடுமலை; அதிக வெயிலால், சின்னவெங்காய பயிர்கள் பாதித்துள்ள நிலையில், இந்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், ஆண்டு தோறும், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. நாற்றுப்பண்ணைகளில் இருந்து, சின்ன வெங்காயம் நாற்று வாங்கி நடவு செய்தல், விதை வாயிலாக நாற்றங்கால் அமைத்து, நடவு செய்தல் மற்றும் நேரடியாக விதை வெங்காயம் நடவு செய்தல் ஆகிய முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது.நேரடியாக வெங்காயம் நடவு செய்தால், 70 முதல் 90 நாட்களில் அறுவடை செய்ய முடியும். விதை வாயிலாக சாகுபடி செய்யும் போது, 120 முதல் 130 நாட்களாகும். வடகிழக்கு பருவமழைக்கு பின், சின்னவீரம்பட்டி, குடிமங்கலம், பாலப்பம்பட்டி சுற்றுப்பகுதிகளில், பரவலாக சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், அதிக வெயிலால் பயிர்கள் பாதித்துள்ளன.தற்போது, உடுமலை உழவர் சந்தையில், சின்னவெங்காயம் கிலோ 45 - 54 ரூபாய் வரை விற்பனையாகிறது. நடப்பு கோடை சீசனில், சாகுபடி பரப்பு குறைவாக உள்ளதால், தேவை அதிகரித்து, சின்னவெங்காயத்துக்கு அதிக விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
11-Apr-2025