உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆன்மிக நகரங்களை இணைக்க சிறப்பு ரயில் 

ஆன்மிக நகரங்களை இணைக்க சிறப்பு ரயில் 

திருப்பூர்; வாரந்தோறும், புதன்கிழமை, மாலை 5:20 மணிக்கு ைஹதராபாத்தில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:07230) வியாழன் காலை, 7:30 மணிக்கு திருப்பதி செல்லும். மதியம் 12:40 மணிக்கு திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக மாலை 3:25 மணிக்கு சிதம்பரம் சென்றடைந்து, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக இரவு, 9:45 மணிக்கு மதுரைக்கு செல்லும்.மூன்றாவது நாள் (வெள்ளி) திருநெல்வேலி வழியாக சென்று, அதிகாலை, 2:30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, வெள்ளியன்று அதிகாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:07229) சனிக்கிழமை மதியம், 2:30 மணிக்கு ைஹதராபாத் சென்றடையும்.ரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில்,' திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரையை இணைக்க இதுவரை ரயில்கள் இருந்தாலும், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக இயங்க குறைவாக ரயில்கள் உள்ளது. இந்த சிறப்பு ரயில் வாயிலாக திருப்பதி - திருவண்ணாமலை - சிதம்பரம் - தஞ்சாவூர் -மதுரை செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதை பொறுத்து, ரயில் இயக்கம் நீட்டிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை