ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
தாராபுரம், பெரியகாளிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 55; தொழிலாளி. நேற்று முன்தினம் தாராபுரம் புதிய அமராவதி ஆற்றுபாலத்தில் மதுபோதையில் குளித்து கொண்டிருந்தார். திடீரென எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.