ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
தாராபுரம்; தாராபுரம் அருகே மானுார்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ், 19, உட்பட, ஒன்பது பேர் அமராவதி புதிய ஆற்றுப்பாலத்தில் குளிக்க நேற்று மதியம் சென்றனர். அதில், மணிராஜ் ஆற்றில் மூழ்கினார். தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் அவரை சடலமாக மீட்டனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.