அத்துமீறிய வாலிபருக்கு சிறை
திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு கருவம்பாளையம், செங்குந்தபுரம், 7வது வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், பூச்சக்காடு 4வது வீதியை சேர்ந்த அஜ்மல் கான், 21 என்பவர் மது போதையில் கோவிலுக்குள் சென்று நுழைவாயில் முன் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டார். தகவலின் பேரில், சென்ட்ரல் போலீசார் விசாரணை நடத்தினர். புகாரின் பேரில், அஜ்மல் கானை, இரு பிரிவின் கீழ் வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.