உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / 115 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

115 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த காட்டுமலையனுார் கிராமத்தில் அனுமதியின்றி வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, குற்ற நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நேற்று சோதனை நடத்தியதில், காட்டு மலையனுார் ஏரிக்கரையில் டிராக்டரில் பதுக்கிய, 27 டெட்டனேட்டர், மற்றும் 115 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வெடிபொருட்களை வைத்திருப்பதற்கான எந்த அனுமதியும், ஆவணங்களும் இல்லை என தெரிந்தது. இது தொடர்பாக வேட்டவலம் போலீசார் வழக்கு பதிந்து, கீழ்பென்னாத்துார் அடுத்த பொன்னான்குளம் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன், 30, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை