மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
9 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
9 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலத்தில், 4,560 அடி உயர பர்வதமலையில், பிரம்மராம்பிகை அம்மன் உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ காலங்களில், பக்தர்கள் தங்கி பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.கோவில் வளாகத்தில் மூன்று இடி தாங்கிகள் இருந்தாலும், அவற்றில் இரண்டு பழுதடைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழையில், கோபுரத்திலுள்ள காவல் தெய்வ சிலையை இடி தாக்கி சேதமானது.கோவில் சுற்றுச்சுவரில் விரிசல் மற்றும் சோலார் விளக்கு சேதமடைந்தது. சேதமான சிலை உள்ளிட்டவற்றை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த, 2010ல் இக்கோவிலில் இடி தாக்கியதில், நான்கு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
9 hour(s) ago
9 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025