மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளராக பல்வீன் பணிபரிந்து வருகிறார். இந்நிலையில், அந்த அலுவலகத்தில், பத்திரபதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், முறைகேடாக பத்திரபதிவு நடைபெறுவதாகவும் வந்த புகாரின் படி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தின் கதவை மூடி, அங்கிருந்த ஊழியர்கள், பத்திரபதிவு எழுத்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, கணக்கில் வராத, 73,190 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய ஆணவங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025