மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டியை சேர்ந்தவர் பெருமாள், 35, விவசாயி. பக்கத்து கிராமமான சோலையருகாவூரில், ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார்.கொக்குகள் பயிரை சேதம் செய்ததால், நேற்று முன்தினம் மாலை, நாட்டு துப்பாக்கியில் தோட்டா நிரப்பி, அவற்றை சுட முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது தொடையில் தோட்டா பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பயன்படுத்துவதும் குற்றம் என்பதால், அதை பயன்படுத்தி, வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுத்த முயன்றதாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தேசூர் போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, துப்பாக்கியை அவர் துடைத்து கொண்டிருந்த போது, அதிலிருந்து தோட்டா பாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025