உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த கக்கல் தெருவை சேர்ந்தவர் ராஜவேல், 37. டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி நிஷா, 28. இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை, ராஜவேல், வேட்டவலம் -- விழுப்புரம் சாலை சுடுகாட்டில் சமாதி கட்டும் பணியில் ஈடுபட்டார். இதற்காக டைல்ஸ் ஒட்டும் வேலையில் ஈடுபட்டபோது, டைல்ஸ் வெட்ட, சுடுகாட்டின் அருகே உள்ள வீட்டில், மின் இணைப்பை கொடுக்க முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்கு வேட்டவலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். வேட்டவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ