விமான பயணியிடம் ரூ.51 லட்சம் கரன்சி பறிமுதல்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை, சிங்கப்பூருக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணியரையும் அவர்களின் உடைமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஆண் பயணி ஒருவர், 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர், சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து எடுத்து செல்ல முயன்றதை கண்டு பிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.