உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது

ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது

திருச்சி: திருச்சி மாநகராட்சி பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்ட இடத் தை, மீண்டும் தங்களின் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்தவரிடம், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., -- பி.ஏ.,வான தாசில்தார் கைது செய்யப்பட்டார். தஞ்சையை சேர்ந்தவர் கோபி. இவருக்கு, திருச்சி கே.கே.நகரில், 11,000 சதுரடி இடம் உள்ளது. இந்த இடத்தை தவறுதலாக மாநகராட்சி இடம் என்று பதிவு செய்து விட்டனர். இதை மாற்றித்தர உரிய ஆவணங்களுடன், திருச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோபி விண்ணப்பித்தார். இதுதொடர்பாக, அவர் திருச்சி ஆர்.டி.ஓ., -- பி.ஏ.,வான தாசில்தார் அண்ணாதுரையை அணுகினார். அவரோ, 'இடத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதா ல், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், கம்ப்யூட்டர் எஸ்.எல்.ஆரில் பெயர் மாற்றம் செய்து தருகிறேன்' என, கூறினார். கோபி, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தல்படி, நேற்று மாலை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வைத்து, பணத்தை அண்ணாதுரையிடம் கோபி கொடுத்தார். அதை பெற்ற அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Saravana
அக் 27, 2025 00:10

சீனா வாகவோ சிங்கப்பூர் ஆகவோ இருந்தால் தூக்கு தான் எதற்கு இந்தியாவில் இவ்வளவி கரிசனம் அவர் இதற்கு கவலைப்படவேய் illai


Gajageswari
அக் 25, 2025 10:46

இவர்கள் சொந்த மாவட்டத்தில் நியமனம் செய்வதால் எழும் பிரச்சினை. வேறு மாவட்டத்தில், குறைந்து 4 மாவட்டங்கள் தாண்டி பணி வழங்க வேண்டும்


Gajageswari
அக் 25, 2025 10:45

இவர்கள் அதே மாவட்டத்தில் வேலை செய்வதால் எழும் பிரச்சினை. சொந்த மாவட்டத்தை விட்டு வேறு குறைந்து 4 மாவட்டங்கள் தாண்டி பணி வழங்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை