உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஓவியர் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்வு

ஓவியர் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்வு

ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவிலில் ஓவியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருவானைக்கோவில் களஞ்சியம் பகுதியில் திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஓவியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கவுரவ தலைவராக பிரான்சிஸ், தலைவராக நாகேந்திரன், செயலாளராக தங்கராஜ், பொருளாளராக அன்பழகன், துணைத்தலைவர்களாக செல்வராஜ், சிவகுமார் ஆலோசகராக, ஆரோக்கியதாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் காமராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி