உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து நகைகள் திருட்டு

வீடு புகுந்து நகைகள் திருட்டு

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த சாலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் (53). இவர் கடந்த 13ம் தேதி காலை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றார். பின்னர் திரும்ப வந்த போது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள் மர்ம நபர்கள் புகுந்து பீரோவை உடைத்து 2 சவரன் தங்க நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளி நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ