உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா விற்ற மூதாட்டிக்கு 7 ஆண்டு சிறை ; விழுப்புரம் சிறப்பு கோர்ட் தீர்ப்பு

கஞ்சா விற்ற மூதாட்டிக்கு 7 ஆண்டு சிறை ; விழுப்புரம் சிறப்பு கோர்ட் தீர்ப்பு

விழுப்புரம் : திண்டிவனம் அடுத்த, கூட்டேரிப்பட்ட ரயில்வே மேம்பாலம் அருகே கடந்த 6.10.2022ம் தேதி அன்று கஞ்சா விற்பனை செய்த பண்ருட்டி ரயில்வே பீடர் சாலையை சேர்ந்த சிவஞானம் மனைவி விஜயா,63; என்பவரை 2 கிலோ கஞ்சாவுடன் மயிலம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் விழுப்புரத்தில் தங்கியிருந்த வாடகை வீட்டை சோதனை செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விஜயா மீது, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கொடுமுடி சேரலாதன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், கஞ்சா கடத்தி விற்பனை செய்த விஜயாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து விஜயா, விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 29, 2024 06:20

சபாஷ், இப்படித்தான் தும்பை விட்டு வாலைப் பிடிக்கணும். இந்த மூதாட்டிக்கு கஞ்சா சப்ளை செய்தது யாருங்கோ?


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ