உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி

வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி

அவலுார்பேட்டை: வளத்தி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் நடந்து சென்றவர் இறந்தார்.வளத்தி அடுத்த கடலி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 53; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 22ம் தேதி வேலை முடிந்து இரவு 7:00 மணிக்கு செஞ்சி மெயின் ரோட்டில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் செல்வம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.படுகாயமடைந்த செல்வம், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை