உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒரு சாட்சி பல்டி

செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒரு சாட்சி பல்டி

விழுப்புரம், : வானுார் அடுத்த பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில், 33 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் பிறழ் சாட்சி அளித்துள்ளனர்.நேற்று இவ்வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளித்த, 34வது சாட்சியான முன்னாள் கிராம உதவியாளர் மணி, அதிகாரிகளின் வற்புறுத்தலால் வழக்கு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டேன். மற்ற விபரங்கள் ஏதும் தனக்கு தெரியாது என பிறழ் சாட்சியம் அளித்தார்.அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணை இன்று 9ம் தேதி தொடரும் என அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி