உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்விரோத தகராறு 14 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 14 பேர் மீது வழக்கு

விழுப்புரம், : விழுப்புரம் அருகே சொத்து தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த கோவிந்தாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன்கள் முனியப்பன், 53; ஜோதி, 40; சங்கர், 37; இவர்கள், 3 பேருக்கும் தலா 5 சென்ட் வீட்டு மனை உள்ளது.இதில், ஜோதிக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, சங்கர் வீடு கட்டியுள்ளார். இதனால், அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 6ம் தேதி, இது குறித்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், காணை போலீசார், இரு தரப்பையும் சேர்ந்த 14 பேர் மீதும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை