| ADDED : ஜூலை 12, 2024 06:32 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் நடந்த சென்ற முதியவர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமம், படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி, 80; இவர், நேற்று காலை 7:30 மணியளவில் சென்னை செல்லும் சாலையில், பாதிரி கிராமத்திலிருந்து ஓங்கூர் செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த வாகனம், முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.