உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டதாரி பெண் மாயம்

பட்டதாரி பெண் மாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பட்டதாரி பெண் காணாமல்போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த புருஷானுாரை சேர்ந்தவர் கேசவன் மகள் ஜோதிகா, 23; இவர், எம்.ஏ., படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ