உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனம் பறிமுதல் 

ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனம் பறிமுதல் 

செஞ்சி: செஞ்சியில் இயங்கி வரும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஒன்றின் பயிற்சி வாகனத்தில் புதிய நபர்களுக்கு பயிற்சி அளித்த போது 6 நபர்களுக்கு பதிலாக 12 நபர்களை ஏற்றிச் சென்றனர். இது குறித்த வீடியே சமூக வளைதளங்களில் பரவியது.இச்சம்பவம் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் கவனத்திற்கு வந்தது.அவரது உத்தரவின்பேரில், செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் அந்த பயிற்சி பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து, செஞ்சி போலீசில் ஒப்படைத்தார். பயிற்சி பள்ளிக்கான உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை