உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் (தனி) தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், கண்காணிப்பு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி ஆய்வு செய்தார்.விழுப்புரம் (தனி) தொகுதி ஓட்டு எண்ணும் மையமான, விழுப்புரம் அரசு அண்ணா கலைக்கல்லுாரி மையத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 6 தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், தனித்தனியாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.அங்கு சுழற்சி முறையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும், கேமரா மூல மும், கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாயில் பகுதி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, பிறகு ஸ்ட்ராங் ரூம்களின் முன் உள்ள போலீஸ் பாதுகாப்பையும் பார்வையிட்டார். தொடர்ந்து, கண்காணிப்பு அறையிலிருந்து 24 மணி நேரமும் செயல்படும் கேமரா காட்சிகளையும் பார்வையிட்டு, அங்கு சுழற்சி முறையில் உள்ள அலுவலர்களிடம், பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி