உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச மனைப்பட்டா வழங்கல்

இலவச மனைப்பட்டா வழங்கல்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த வளையம்பட்டு கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலா ளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்தி வேல், துணைச் சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஊராட்சி தலைவர் கவுரி வரவேற்றனர்.விழாவில் அமைச்சர் பொன்முடி, 33 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி பேசினார்.மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ., பாலசுப்ரமணியம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி