உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

வானுார்: விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட செயலாளர் சண்முகம் அறிவுறுத்தலின்படி வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ராவுத்தன்குப்பம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய பொறுப்பாளர் முருகன் முன்னிலை வகித்தனர். சக்ரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அடையாள அட்டைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், அணி செயலாளர்கள் குணசேகரன், கார்த்திகேயன், வீரப்பன், அப்பாஸ், ஜெகன்நாதன், பாலகிருஷ்ணன், சுமன், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் வீரப்பன்.கிளைச் செயலாளர் ஞானசேகர், ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், மாவட்ட பாசறை துணைச் செயலாளர் வினோத்குமார், மகளிர் அணி செயலாளர் மாலா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சங்கர், கிளை நிர்வாகிகள் சரவணன், பிரகாஷ், அன்பு, ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ