உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

திருவெண்ணெய்நல்லுார்,: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மோதி முதியவர் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ், 50; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் மடப்பட்டு - திருக்கோவிலுார் சாலையில் நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக பின்னால் வந்த பைக் ரங்கராஜ் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்