உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் பாலமுருகன் கோவிலில் பங்குனி உற்சவம்

திண்டிவனம் பாலமுருகன் கோவிலில் பங்குனி உற்சவம்

திண்டிவனம்: திண்டிவனம் பாலமுருகன் கோவில் 47ம் ஆண்டு பங்குனி உத்திர உற்சவம் நடந்தது.உற்சவத்தையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மதியம் 12:00 மணியளவில், சக்திவேல் ராஜேந்திரனுக்கு மிளகாய் பொடி அபிேஷகம், மார்பின் மேல் உரல் வைத்து மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது.மாலை 4:00 மணியளவில் தீ மீதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது.மாலை 5:00 மணியளவில் பக்தர்கள் உடலில் அலகு குத்தி, சுவாமி சிலையை வாகனங்கள் மூலம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை