உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

விழுப்புரம் | ; விழுப்புரம் நகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளியில், யோகாநந்தா சத்சங்க அறக்கட்டளை (ஒய்.எஸ்.எஸ்.ஐ) சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் பசுபதி தொடக்க உரையாற்றினார்.அறக்கட்டளை நிர்வாகிகள் சுவாமி சுத்தானந்தகிரி, சுவாமி விரஜானந்தா ஆகியோர் அருளுரை வழங்கி, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டினர்.பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் தங்கராஜ் பங்கேற்று, ஊக்க உரையாற்றினார்.உதவி தலைமை ஆசிரியர் மீனாட்சி ஏற்புரையாற்றினார். ஒய்.எஸ்.எஸ்.ஐ., அறக்கட்டளை மண்டல நிர்வாகி கலியபெருமாள் நன்றி கூறினார். ஆசிரியர்கள் அண்ணாமலை, ரத்தினமணி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை