விழுப்புரம் : பவுர்ணமி கிரிவலத்தை யொட்டி, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அலுவலக செய்திக்குறிப்பு:இன்று 21ம் தேதி திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், இன்று கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திருக்கோவிலுார், சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, வேலுார், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம், திருப்பத்துார் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 150 சிறப்பு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.வார இறுதி நாளான இன்று மற்றும் வரும் 22ம் தேதி மக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் பயணிப்பர். இதையொட்டி, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக இன்று 425 சிறப்பு பஸ்களும், நாளை 215 உட்பட மொத்தம் 640 சிறப்பு பஸ்களை இந்த வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலுார், ஓசூர், புதுச்சேரி (இ.சி.ஆர்., வழி) திருவண்ணாமலை (வழி ஆற்காடு, ஆரணி), திருவண்ணாமலை (வழி காஞ்சிபுரம், வந்தவாசி) ஆகிய ஊர்களுக்கு இன்று 15 சிறப்பு பஸ்களும், நாளை 40 உட்பட மொத்தம் 55 சிறப்பு பஸ்களை இந்த வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயணிகள் https://www.tnstc.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.