உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சரியாக தகவல் அளிக்காவிடில் நடவடிக்கை மாநில ஆணையர் எச்சரிக்கை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சரியாக தகவல் அளிக்காவிடில் நடவடிக்கை மாநில ஆணையர் எச்சரிக்கை

விழுப்புரம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சரியான தகவல் அளிக்காத அலுவலர் மீது, அபராதம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தகவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ், தகவல் கோரியவர்கள் அளித்த புகார்கள் மீதான மேல்முறையீட்டு விசாரணை, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் துவங்கி 2 நாட்கள் நடந்தது.மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கி மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கிடைக்கப் பெறாத மனுதாரர்கள், மேல்முறையீடுக்காக நேரடியாக சென்னைக்கு வர சிரமமாக இருக்கும். அதனால், தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில், தலைமை ஆணையாளர் மற்றும் ஆணையாளர்கள் நேரடியாக சென்று, புகார் குறிப்பிட்ட மனுதாரர்கள் மற்றும் பொது தகவல் அலுவலர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், 2 நாள்கள் விசாரணை நடந்தது. 46 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறையில் கீழ் உள்ள விக்கிரவாண்டி, வானுார், கோலியனுார், காணை, செஞ்சி உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் சரியாக தகவல் அளிக்காதது போன்ற மனுதாரர்கள் கடந்த 2021ம் ஆண்டு முதல் அளித்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு உள்ளது. மனுதாரர்களிடமிருந்து வரும் மனுக்கள் மீது, உடனடியாக விசாரணை மேற்கொள்ள பொது தகவல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.மனுதாரர்கள் அளித்த மனுவின் மீது 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகன்கள், தாங்கள் அனுப்பும் மனுவில் 10 ரூபாய்க்கான வில்லை ஒட்டி இருந்தால், அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.பெறப்பட்ட மனுக்கள் மீது சரியான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவர்கள் மேல்முறையீடு செய்தும் சரியான பதில் அளிக்கப்படாமல் இருந்தாலும், இந்த சட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். மனுக்கள் மீது திருப்திகரமான முறையில் விளக்கம் அளிக்காத பட்சத்தில், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு ஆணையர் செல்வராஜ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kumaresan Joon Sin
ஜூன் 18, 2024 22:37

வணக்கம் சார் எனக்கு சரியான தகவல் தரவில்லை நான் ஒரு தகவல் கேட்டேன் அதற்கு பதிலாக வேற ஒரு பதில் தருகிறார் நேரில் சென்று போய் கேட்டேன் வேண்டுமானால் மேல்முறையீடு செய்து பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா நன்றிநன்றி


Thiruvenkadam
ஜூன் 18, 2024 05:51

மாநில தகவல் ஆணையர்களே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மதிப்பதில்லை தன் கடமையை சரியாக செய்வதில்லை பின்பு பொது தகவல் அலுவலர் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வார்


Thiruvenkadam
ஜூன் 18, 2024 05:48

தகவல் ஆனையர்கள் முதலில் சட்டப்படி நடந்தால் குற்றம் குறையும் ஆணையர்கள் ஆணையிட்டு இரண்டு ஆண்டுகள் கழித்தும் சரியான தகவல் வழங்கவில்லை அப்படி என்றால் ஆணையர்கள் மீது பொது தகவல் அலுவலர்களுக்கு பயமில்லை


P S SUDHAGARAN
ஜூன் 16, 2024 20:26

மாநில தகவல் ஆணையம் பொது தகவல் அலுவலரே முழுமையாக தகவல் அளிக்கவில்லையே


P S SUDHAGARAN
ஜூன் 16, 2024 20:25

மாநில தகவல் ஆணையம் பொது தகவல் அலுவலரே முழுமையாக தகவல் அளிக்கவில்லையே அதற்கு யார் நடவடிக்கை எடுப்பார்கள்


Prabhu Prabhu
ஜூன் 16, 2024 17:40

தகவல் தரபடுவதிலைை.


Prabhu Prabhu
ஜூன் 16, 2024 17:38

நடவடிக்கை எந்த எடுப்பதில்லை.


Prabhu Prabhu
ஜூன் 16, 2024 17:36

உசலம்பட்டி கோட்டாச்சியர்.தாசல்தாா்த பெ உரிமை சட்டத்தை மதிப்பதில்லை.மற்றும் செல்லம்பட்டி பிஓ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.


N.selvakumar
ஜூன் 15, 2024 20:36

எங்கள் போதிய தகவல்கள் வரவில்லை


N.selvakumar
ஜூன் 15, 2024 20:35

தகவல் உரிமைச் சட்டம் போதிய தகவல்கள் வரவில்லை


சமீபத்திய செய்தி