உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வங்கியில் திடீர் தீ விபத்து: விழுப்புரத்தில் பரபரப்பு

வங்கியில் திடீர் தீ விபத்து: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்,; விழுப்புரத்தில் தனியார் வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.விழுப்புரத்தில், திருச்சி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் நேற்று மதியம் 1.00 மணிக்கு மின்கசிவால் மின் மீட்டர் பெட்டி தீ பிடித்து எரிந்து பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது.திடுக்கிட்ட வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் மேல்தளத்தில் உள்ள மொபைல் நிறுவன ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து, கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தி, தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை