உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் பலி

பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் பலி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன், 38; இவர் தொரவியில் வெல்டிங் கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை சொந்த வேலையாக தனது பைக்கில் திருக்கனுார் சென்று மீண்டும் தொரவிக்கு திரும்பினார்.ராதாபுரம் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்