அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேல் தனியாலம்பட்டு அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.விழாவையொட்டி கடந்த 17ம் தேதி மாலை அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.நேற்று முன்தினம் இரவு கரக திருவிழா நடந்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நாளை 23ம் தேதி மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது.