மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று தீமிதி விழா
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று தீமிதி விழா நடக்கிறது.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயானக்கொள்ளை நடந்தது. இன்று 2ம் தேதி மாலை 3:00 மணியளவில் தீமிதி விழா நடக்கிறது. விழாவையொட்டி, காப்பு கட்டி 7 நாள் விரதம் இருந்த பக்தர்கள், ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமானந்தம் சுவாமிகள் தலைமையில் அக்னி குளத்தில் இருந்து அங்காளம்மனை ஊர்வலமாக கோவில் எதிரே உள்ள அக்னி குண்டத்திற்கு மதியம் 2:00 மணியளவில் அழைத்து வருகின்றனர். அங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்க உள்ளனர்.ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.