உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

விழுப்புரம், : வளவனுார் அருகே உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளவனுார் அடுத்த கெங்கராம்பாளையம் புத்து மாரியம்மன் கோவில் அருகே கடந்த 30ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உடல் நலம் பாதித்து மயங்கி கீழே விழுந்தார்.உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று முன்தினம் இறந்தார்.வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி