உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி கொடுமை: கணவர் மீது வழக்கு

மனைவி கொடுமை: கணவர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரவின்குமார் மனைவி சுவேதா, 24; இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணமானது. 25 நாட்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக இருந்த நிலையில், பிரவின்குமார் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுவேதாவிடம் நகை மற்றும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.இதனால், சுவேதா கோபித்துக் கொண்டு விழுப்புரம், மணிமேகலை தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். கடந்த 3ம் தேதி தாய் வீட்டில் இருந்தி சுவேதாவை திட்டி, தாக்கியுள்ளனர். இது குறித்து சுவேதா அளித்த புகாரின் பேரில் பிரவீன்குமார், அவரது தந்தை பழனிவேல், தாய் சுபா, உறவினர்கள் மீனாட்சி, குமார், பத்மா ஆகியோர் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை