உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு உயர்நிலை பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு

அரசு உயர்நிலை பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு

விழுப்புரம் : உலக பிளாஸ்டிக் தினத்தை முன்னிட்டு கோலியனுார் ஒன்றியம், பூத்தமேடு அரசு உயர்நிலை பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.சுற்றுச்சூழல் மன்றம், ஜே.ஆர்.சி., அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து, ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை ஆகியோர், பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் தீமைகள் பற்றியும், மஞ்சள் பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்தும் எடுத்துரைத்தனர்.பின், மாணவர்களுக்கு மஞ்சள் பை மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை